Thursday 15 September 2016

சிங்கப்பூர் சுத்தமான நகரமானது எப்படி?


சிங்கப்பூர் உலக அளவில் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு நகரமாக விளங்குவதற்கு அதன் சுத்தமே முக்கிய காரணியாக விளங்குகிறது என்பது மிக மிக உண்மை.

மிக சுத்தமான ஒரு நகர். சுத்தத்தை அனவருமே விரும்புகிறோம். அதனால் தான் நமது வீட்டை எப்போது சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்னும் அக்கறை நம்மிடம் எப்போதுமே உண்டு. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுவது என்பது நமக்கு ஒரு பண்பாடாகவே ஆகிவிட்டது.

ஆனால் நமது வீட்டுக்கு வெளியே உள்ள நிலைமை என்ன? ஏனோ நாம் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. .நமது சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் நமக்கு எப்போதுமே ஏற்படுவதில்லை.  இதனையும் நாம் நமது பணபாட்டின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டோமோ?

இப்போது  சிங்கப்பூரைப் பற்றி நாம் பெருமைப்படுகிறோம். அது எப்படி வந்தது? அப்படி என்றால் சிங்கப்பூரியர்கள் காலங்காலமாக சுத்ததைப் பேணி வந்தவர்களா? அப்படி எல்லாம் ஒன்றுமில்லை! உண்மையைச் சொன்னால் சீனர்கள் சுத்தம் என்பதை எந்தக் காலத்திலும் கடைபிடிக்கும்  பழக்கம் இல்லாதவர்கள்!

அதனால் தான் அந்த நாடு மிகவும் கடுமையானச் சட்டதிட்டங்களை வைத்து நாட்டைச் சுத்தமாக வைத்திருக்கின்றது!

சிங்கப்பூரியர்கள் தங்களது நாட்டைவிட்டு மலேசியா போன்ற நாடுகளுக்கு வரும் போது இங்கு எந்தவிதமான சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதில்லை! வீதிகளில் குப்பைப் போடுவதில் எந்த விதப் பாகுப்பாடும் இல்லை!  மலேசியா வந்தால் மலேசியர்களாகவே மாறிவிடுகின்றனர்!

ஆக, சிங்கப்பூரின் கடுமையான சட்டதிட்டங்கள் தான் அந்த நாட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது! மற்றபடி அவர்கள் திருந்தி விட்டார்கள் - நாட்டுபற்று -  என்பதெல்லாம்வெறும் கனவு. சீனர்களைப் பொறுத்தவரை சுத்தம் என்பது - இலட்சுமியை விரட்டுவது - என்பதில் குறைந்தபட்சம் ஒரு சாரார் நம்புகின்றனர்!

ஆனாலும் கல்வியில் அதிகக் கவனம் செலுத்தி வரும்  சீன சமூகம் இப்போது மெல்ல மாறி வருகிறது என்பதில் ஐயமில்லை. சுத்தம் தேவை என்பதை அவர்கள் உணர்கின்றனர். .

மலேசியாவில் உள்ள சீன சமுகம் மாறுமா என்பது கேள்விக்குறியே!!  கடுமையான சட்டதிட்டங்களின்றி இவர்களை மாற்றுவது என்பது சிரமமான காரியம் தான்!

மேல் நாடுகளில் இது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. வீதிகளில் குப்பை போடுவதைக் கூட ஒர் அநாகரிகமான கலாச்சாரம் என்பதாக அவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் வீடுகளிலிருந்தே எங்கே குப்பைகளைப் போட வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கின்றனர்.

உண்மையைச் சொன்னால் இது ஒரு பிரச்சனையே அல்ல. வீடுகளில் நம் பிள்ளைகளுக்குப் பொறுப்பாகச் சொல்லிக் கொடுத்தால் அவர்கள் இதனைக் கடைப்பிடிப்பார்கள். நாம் என்ன செய்கிறோமோ அதைத்தான் பிள்ளைகளும் செய்வார்கள். நம் வீடும் சுத்தமாக இருக்க வேண்டும். நமது சுற்றப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும். நமது நாடும் சுத்தமாக இருக்க வெண்டும்.

சுத்தமாக இருந்தால் நாமும் சிங்கப்பூர் தான்!




No comments:

Post a Comment