Friday 26 August 2016

நாம் எங்கே போகிறோம்?


காலையில் படித்த செய்தி; கண்கலங்க வைக்கும் செய்தி.

இளம் தாய் தனது ஐந்து குழந்தைகளுடன் ஒரு மாட்டுக்கொட்டகையை விட கேவலமான ஒரு  வீட்டில்  உண்ண உணவின்றி, மின்சாரமின்றி, தண்ணிரின்றி வாழ்ந்து வந்திதிருக்கிகின்றார்.

துர்நாற்றம், கொசுக்கடி இவைகளோடு கையில் ஒரு குழந்தை. குழந்தைக்குக் குடிக்கப் பாலில்லை; புளித்துப்போன பாலையும் குழந்தைக்குக் கொடுத்து வந்திருக்கிறார் அந்தத் தாய். பிள்ளைகளைக் கவனிக்க ஆளில்லாத ஒரு நிலையில் பிள்ளைகளின் உணவுக்காகத் தெருத்தெருவாக அலைந்து இரும்புத் துண்டுகளை  விற்று கிடைத்ததில் பிள்ளைகளின் பசியைப் போக்கியிருக்கிறார். கணவரோ ஒரு போதைப் பித்தர். போதைப்பித்தர் மறுவாழ்வு மையம் அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது

இந்த அவல நிலையில் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டப் பின்னர் உடனடியாகத் தக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அந்தக் குடும்பம்  ஒரு சில வாரங்கள் பராமரிப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு அதன் பின்னர் அவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படுமெனத் தெரிகிறது.

பிள்ளைகளுக்குக் கல்வி கொடுக்கப்பபட வேண்டும். அவர்களுக்கு அடையாள ஆவணங்கள் இல்லை. இவை சீர்செய்யப்பட வேண்டும்.

இப்போது இந்தப் பிரச்சனையை பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப் பட்டிருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்னும்  நம்பிக்கை நமக்கு உண்டு.

ஆகக் கடைசியாகக் கிடைத்த தகவலின்படி அந்த இளம் தாயும் ஒரு போதைப் பித்தராம். அவரும் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பபடும் அபாயம் இருப்பதை அறிந்து  அந்தத் தாய் தலைமறையாகி விட்டாராம்! பரவாயில்லை! குழந்தைகளாவது நல்லபடியாக பாதுகாப்பாக வளரட்டும். அதைத்தான் நாம் சொல்ல முடியும்.

நகராண்மைக் கழக உறுப்பினர், டேவிட் மார்ஷலுக்கும்  அவர்தம்  குழுவினருக்கும் நமது நன்றியைப் பதிவு செய்கிறோம்.

எவனோ வாழவதற்கு இந்தத் தமிழினம் பலியாகிறது! கபாலியும் அதைத்தான் சொல்கிறது!

No comments:

Post a Comment